நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''ஆறு குழுவினரை நான் சபிக்கின்றேன். ஏனெனில் அல்லாஹ் அவர்களை சபிக்கின்றான்,'' என்று சாபத்திற்கு ஆளாபவர்களைப் பற்றி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
* அல்லாஹ்வின் குர்ஆன் கருத்துக்களை திரித்து அதிகப்படுத்துபவர்.
* அல்லாஹ்வின் கத்ரை (விதித்த விதி) பொய்ப்படுத்துபவர்.
* அடக்குமுறையாக ஆட்சியைப் பெறுபவர்.
* ஹரம் ஷரீபை (மெக்காவிலுள்ள முகர்ரமாவில் வேட்டையாடுதல், மரங்களை வெட்டுதல் போன்ற தடை செய்யப்பட்ட செயல்கள்) ஹலாலாக (நியாயம்) கருதுபவர்.
* என்னுடைய சந்ததியினர்களில், அல்லாஹ் ஹராம் (நியாயமற்றது) ஆக்கியதை ஹலாலாக கருதுபவர்.
* எனது வழிமுறைகளை விட்டு விலகியிருப்பவர். இந்த ஆறு பிரிவினரும் இறைவனின் சாபத்திற்கு ஆளாவார்கள். இவற்றைத் தவிர்த்து, இறைவனின் கட்டளைகளுக்கு அஞ்சி நடந்தால், சாபம் என்பதே இனி இல்லை.