நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்ல எண்ணத்தால் சிறிய நன்மைகளும் பெரிய நன்மைகளாக மாறி விடும்.
* பொது இடங்கள், நடைபாதையில் உள்ள நிழல் தரும் மரங்களை வெட்டாதீர்கள்.
* நிழல் தரும் மரங்களின் அருகில் அசுத்தம் செய்யாதீர்கள்.
* கடன் கொடுத்து உதவுவதும் தர்மமே.
* நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துபவரே மேலானவர்.
* பணம் செலவழியும் முன் மகிழ்ச்சியுடன் தர்மம் செய்யுங்கள்.
* சண்டை சச்சரவை சமாதானம் மூலம் தீர்க்க முயலுங்கள்.
* இறை நினைவுடன் இருப்பவர் முகத்தில் ஒளி உண்டாகும்.
* மற்றவர் மீது குறை காண்பவன் கீழ்நிலை அடைவான்.
- நபிகள் நாயகம்