ADDED : செப் 30, 2020 06:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பெற்றோருக்கு உதவும் குழந்தைகளின் வாழ்நாளை இறைவன் அதிகப்படுத்துவான்.
* பெற்றோரை கோபமூட்டினால் உங்கள் மீது இறைவன் கோபம் கொள்வான்.
* துாய எண்ணம் இருப்பவருக்கு நன்மை அதிகம் கிடைக்கும்.
* துாய எண்ணம் இல்லாவிட்டால் பெரிய நன்மையும் அற்பமாகி விடும்.
* உண்மை வழி நடந்தால் நன்மை கிடைக்கும். நன்மை செர்க்கத்தை அடைய செய்யும்.
* பொய் சொன்னால் பாவம் சேரும். பாவங்கள் ஒருவனை நரகத்தில் தள்ளி விடும்.
* கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசையால் உயர்ந்த நிலையில் இருப்பவர்களும் தாழ்ந்த நிலை அடைவர்.
* கருணை இருக்குமிடம் சொர்க்கம். கஞ்சத்தனம் இருக்குமிடம் நரகம்.
* கைமாறு செய்யாவிட்டாலும் உதவியவரை பாராட்டுங்கள்.
- நபிகள் நாயகம்