sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஜோசியம்

/

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

/

தனுசு

/

தனுசு

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு


தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் : தனுசு
09 ஏப் 2016

முந்தய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

தனுசுபெற்றோர் மீது அன்பு கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் வக்கிரம் அடைந்து 9-ம் இடத்தில் உள்ளார். இதனால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகமுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். திட்டமிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். கையிருப்பு கணிசமாய் அதிகரிக்கும். குடும்பத் தேவை நிறைவேறும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாக செயல்படுவர். எதிரி கூட உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை உருவாகும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறி குதுõகலத்தை உண்டாக்கும். குரு 2016 ஆக.2 வரை சிம்ம ராசியில் இருப்பார். அதன் பிறகு வக்கிர நிவர்த்தி அடைந்து கன்னி ராசிக்கு மாறுவது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. அவரால் நற்பலன் தர முடியாது. பொதுவாக 10-ம் இடத்தில் இருக்கும் குருபகவான் பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குரு சாதகமற்று இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளது. இதன் மூலம் ஆற்றல் மேம்படும். பண வரவு சிறப்பாக அமையும். பிள்ளைகளின் வழியில் சுபச் செலவு உண்டாகும். கேது 3-ம் இடத்தில் இருக்கிறார். இஷ்ட தெய்வ வழிபாடு சிறக்கும். பெற்றோர், பெரியவர்களின் அன்பும் ஆசியும் கிடைக்கும். உறவினர் உதவிக்கரம் நீட்டுவர்.

நோயின் தீவிரத்தன்மை மறையும். ராகு 9-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவரால் செயலில் தடைகள் குறுக்கிடலாம். சனிபகவான் இப்போது 12-ம் இடத்தில் இருக்கிறார். அவரால் நற்பலனை எதிர்பார்க்க முடியாது. வெளியூர் பயணத்தால் அடிக்கடி அலைச்சலுக்கு ஆளாக நேரிடும். ஏழரை சனி காலம் என்பதால் தொல்லைகளை அனுபவித்து வந்திருப்பீர்கள். இதற்காக அஞ்ச வேண்டாம். சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரின் 7-ம் இடத்து பார்வை மூலம் அவர் பொருளாதார வளத்தைக் கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட வசமாக புதிய சொத்து வீடு, மனை வாங்க யோகம் உண்டு. 2016 ஆக. 2 க்கு பிறகு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி தாமதமாகலாம். கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவு உருவாகலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து போகவும். உடல்நிலை சற்று பாதிக்கப்படலாம். ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை கொள்வது நல்லது.

பணியாளர்களுக்கு குரு சாதகமான இடத்தில் இருப்பதால் எதிர்பார்த்த சலுகை விரைவில் கிடைக்கும். நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவீர்கள். விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு பணி, இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு. 2016 ஆக. 2க்கு பிறகு நற்பலன் குறையத் தொடங்கும். வேலையில் பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். ஆக. 2 வரை எதிர்பார்த்ததை விட வருமானம் அதிகமாக கிடைக்கும். அதன் பிறகு புதிய வியாபாரத்தை தொடங்க வேண்டாம். எதிரி தொல்லை தலை துõக்க ஆரம்பிக்கும் , பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை கூட சிலருக்கு உருவாகலாம்.

கலைஞர்களுக்கு விடாமுயற்சி இருந்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

சக கலைஞர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம்.

மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நன்மைக்கு வழிவகுக்கும்.

விவசாயிகள் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதத்தில் நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்களில் நல்ல மகசூல் காண்பர். இந்தக் காலக்கட்டத்தில் புதிய நிலம் வாங்க யோகம்உண்டாகும். நிலப்பிரச்னை தீரும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை காண்பர். தாய் வீட்டினரின் அன்பைப் பெற்று மகிழ்வர்.

2017 ஜனவரி- ஏப்ரல் 13 ஜன.16ல் துலாம் ராசிக்கு அதிசாரம் (முன்னோக்கி செல்லுதல்) அடையும் குரு மார்ச் 10 வரை அங்கேயே இருக்கிறார். குருபகவான் சாதகமான இடத்தில் இருப்பதால் நன்மை அதிகரிக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். முயற்சி அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். குறுக்கிடும் தடைகளை எளிதில் முறியடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு சிறப்பாக அமையும். உங்கள் மீதான அவப்பெயர் அடியோடு விலகும். குடும்பத்தில் ஆடம்பர வசதி அதிகரிக்கும். சுபசெலவு மூலம் மகிழ்ச்சிக்கு ஆளாவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் இருந்த பிற்போக்கான நிலை மறையும். சிலர் அதிகார அந்தஸ்து மிக்க பதவிக்கு உயர்த்தப்படுவர். அரசு ஊழியர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். அரசின் வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். நிர்வாகச் செலவைக் கட்டுப்படுத்த முயல்வீர்கள். முதலீட்டை அதிகப்படுத்தாமல் உழைப்பால் உயர்வு பெறுவீர்கள். புதிய தொழில் மேற்கொள்வதை இப்போதைக்கு தவிர்க்கவும்.

கலைஞர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவர். வெளியூர், வெளிநாட்டு பயணத்தால் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவர்.

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. தலைமையின்
நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்வர்.

மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் சிறப்பான முன்னேற்றம் காண்பர். அடிக்கடி போட்டியில் பங்கேற்று பரிசு பெறுவர்.

விவசாயத்தில் நல்ல வளத்தை காணலாம். நெல், கோதுமை மற்றும் மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும்.  பெண்கள் பிறந்த வீட்டினரின் ஆதரவு கிடைக்கப் பெறுவர். உறவினர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு மறையும். கண் நோய் ஏற்பட்டு விலகும்.

பரிகாரம்: விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபடுங்கள். வெள்ளியன்று அம்பிகையை வழிபடுங்கள். சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபமிட்டு, எள்சோறு படைத்து வணங்குங்கள். ராகுவுக்கு நீல நிற வஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள். ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை வியாழனன்று தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.


Advertisement

Advertisement Tariff

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் : தனுசு
09 ஏப் 2016


rasi

தனுசுபெற்றோர் மீது அன்பு கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் வக்கிரம் அடைந்து 9-ம் இடத்தில் உள்ளார். இதனால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகமுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். திட்டமிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். கையிருப்பு கணிசமாய் அதிகரிக்கும். குடும்பத் தேவை நிறைவேறும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாக செயல்படுவர். எதிரி கூட உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை உருவாகும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறி குதுõகலத்தை உண்டாக்கும். குரு 2016 ஆக.2 வரை சிம்ம ராசியில் இருப்பார். அதன் பிறகு வக்கிர நிவர்த்தி அடைந்து கன்னி ராசிக்கு மாறுவது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. அவரால் நற்பலன் தர முடியாது. பொதுவாக 10-ம் இடத்தில் இருக்கும் குருபகவான் பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குரு சாதகமற்று இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளது. இதன் மூலம் ஆற்றல் மேம்படும். பண வரவு சிறப்பாக அமையும். பிள்ளைகளின் வழியில் சுபச் செலவு உண்டாகும். கேது 3-ம் இடத்தில் இருக்கிறார். இஷ்ட தெய்வ வழிபாடு சிறக்கும். பெற்றோர், பெரியவர்களின் அன்பும் ஆசியும் கிடைக்கும். உறவினர் உதவிக்கரம் நீட்டுவர்.

நோயின் தீவிரத்தன்மை மறையும். ராகு 9-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவரால் செயலில் தடைகள் குறுக்கிடலாம். சனிபகவான் இப்போது 12-ம் இடத்தில் இருக்கிறார். அவரால் நற்பலனை எதிர்பார்க்க முடியாது. வெளியூர் பயணத்தால் அடிக்கடி அலைச்சலுக்கு ஆளாக நேரிடும். ஏழரை சனி காலம் என்பதால் தொல்லைகளை அனுபவித்து வந்திருப்பீர்கள். இதற்காக அஞ்ச வேண்டாம். சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரின் 7-ம் இடத்து பார்வை மூலம் அவர் பொருளாதார வளத்தைக் கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட வசமாக புதிய சொத்து வீடு, மனை வாங்க யோகம் உண்டு. 2016 ஆக. 2 க்கு பிறகு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி தாமதமாகலாம். கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவு உருவாகலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து போகவும். உடல்நிலை சற்று பாதிக்கப்படலாம். ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை கொள்வது நல்லது.

பணியாளர்களுக்கு குரு சாதகமான இடத்தில் இருப்பதால் எதிர்பார்த்த சலுகை விரைவில் கிடைக்கும். நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவீர்கள். விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு பணி, இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு. 2016 ஆக. 2க்கு பிறகு நற்பலன் குறையத் தொடங்கும். வேலையில் பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும். ஆக. 2 வரை எதிர்பார்த்ததை விட வருமானம் அதிகமாக கிடைக்கும். அதன் பிறகு புதிய வியாபாரத்தை தொடங்க வேண்டாம். எதிரி தொல்லை தலை துõக்க ஆரம்பிக்கும் , பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை கூட சிலருக்கு உருவாகலாம்.

கலைஞர்களுக்கு விடாமுயற்சி இருந்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

சக கலைஞர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம்.

மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நன்மைக்கு வழிவகுக்கும்.

விவசாயிகள் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதத்தில் நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்களில் நல்ல மகசூல் காண்பர். இந்தக் காலக்கட்டத்தில் புதிய நிலம் வாங்க யோகம்உண்டாகும். நிலப்பிரச்னை தீரும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை காண்பர். தாய் வீட்டினரின் அன்பைப் பெற்று மகிழ்வர்.

2017 ஜனவரி- ஏப்ரல் 13 ஜன.16ல் துலாம் ராசிக்கு அதிசாரம் (முன்னோக்கி செல்லுதல்) அடையும் குரு மார்ச் 10 வரை அங்கேயே இருக்கிறார். குருபகவான் சாதகமான இடத்தில் இருப்பதால் நன்மை அதிகரிக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். முயற்சி அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். குறுக்கிடும் தடைகளை எளிதில் முறியடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு சிறப்பாக அமையும். உங்கள் மீதான அவப்பெயர் அடியோடு விலகும். குடும்பத்தில் ஆடம்பர வசதி அதிகரிக்கும். சுபசெலவு மூலம் மகிழ்ச்சிக்கு ஆளாவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் இருந்த பிற்போக்கான நிலை மறையும். சிலர் அதிகார அந்தஸ்து மிக்க பதவிக்கு உயர்த்தப்படுவர். அரசு ஊழியர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். அரசின் வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். நிர்வாகச் செலவைக் கட்டுப்படுத்த முயல்வீர்கள். முதலீட்டை அதிகப்படுத்தாமல் உழைப்பால் உயர்வு பெறுவீர்கள். புதிய தொழில் மேற்கொள்வதை இப்போதைக்கு தவிர்க்கவும்.

கலைஞர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவர். வெளியூர், வெளிநாட்டு பயணத்தால் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவர்.

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. தலைமையின்
நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்வர்.

மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் சிறப்பான முன்னேற்றம் காண்பர். அடிக்கடி போட்டியில் பங்கேற்று பரிசு பெறுவர்.

விவசாயத்தில் நல்ல வளத்தை காணலாம். நெல், கோதுமை மற்றும் மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும்.  பெண்கள் பிறந்த வீட்டினரின் ஆதரவு கிடைக்கப் பெறுவர். உறவினர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு மறையும். கண் நோய் ஏற்பட்டு விலகும்.

பரிகாரம்: விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபடுங்கள். வெள்ளியன்று அம்பிகையை வழிபடுங்கள். சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபமிட்டு, எள்சோறு படைத்து வணங்குங்கள். ராகுவுக்கு நீல நிற வஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள். ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை வியாழனன்று தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.

மேலும் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் :


Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us