sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

வெற்றி பெற முடியுமா?

/

வெற்றி பெற முடியுமா?

வெற்றி பெற முடியுமா?

வெற்றி பெற முடியுமா?


PUBLISHED ON : அக் 25, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 25, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மழை விட்டும் துாறல் விடாத கதையாக இருக்கிறதே...' என கவலையில் ஆழ்ந்துள்ளனர், பீஹாரில் உள்ள காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட, 'இண்டியா' கூட்டணி கட்சியினர்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.

எதிர்க்கட்சி தரப்பிலான, 'இண்டியா' கூட்டணியில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பதில் இழுபறி நீடித்ததால், அந்த கூட்டணியில் இணக்கம் ஏற்பட வில்லை என, பரவலாக பேச்சு எழுந்தது.

இந்நிலையில், சமீபத்தில் இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், தேஜஸ்வி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள் பங்கேற்றனர்.

பின்னணியில் வைக்கப்பட்டிருந்த பேனரில், தேஜஸ்வி யாதவின் படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது; காங்கிரஸ் தலைவர்களான ராகுல், சோனியா ஆகியோரின் படங்கள் இல்லை.

இதையடுத்து, 'ராகுலின் படத்தை பேனரில் வைப்பதில் தேஜஸ்விக்கு என்ன பிரச்னை...?' என, காங்கிரஸ் கட்சியினர் ஆவேசப்பட்டனர்.

பீஹார் மக்களோ, 'ஓட்டுப் பதிவு நாள் வரை, கூட்டணியில் குழப்பம் நீடித்தால், அப்புறம் எப்படி இவர்களால் வெற்றி பெற முடியும்...?' என, கிண்டல் அடிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us