sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

அரசியல் அவ்வளவு தானா?

/

அரசியல் அவ்வளவு தானா?

அரசியல் அவ்வளவு தானா?

அரசியல் அவ்வளவு தானா?

1


PUBLISHED ON : நவ 01, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 01, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'வாரிசுக்கு வாய்ப்பு வாங்குவது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்காது போல்இருக்கிறதே...' என புலம்புகிறார், மத்திய விவசாய துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான்.

மத்திய பிர தேசத்தில் செல்வாக்கு மிக்க அரசியல்வாதி சிவ்ராஜ் சிங் சவுகான். 16 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த பெருமைக்குரியவர்.

ஆனால், கடந்த முறை நடந்த ம.பி., சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றபோதும், இவரை முதல்வராக நியமிக்காமல், புதுமுகமான மோகன் யாதவை முதல்வராக்கியது, பா.ஜ., மேலிடம்.

இதனால் விரக்தியில் இருந்த சவுகானை, மத்திய அமைச்சராக்கி ஆறுதல் படுத்தினர் கட்சி தலைவர்கள். நவ., 13ல் நடக்கவுள்ள ம.பி.,யின் புதானி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தன் மகன் கார்த்திகேயாவை போட்டியிட வைக்க முட்டி மோதினார், சவுகான்.

இந்த தொகுதியில் சவுகான், ஆறு முறை வெற்றி பெற்றவர் என்பதால், தனக்கு பின், அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக, தன் மகன்இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார்.

ஆனாலும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராம்காந்த் பார்கவாவை வேட்பாளராக அறிவித்து விட்டது, பா.ஜ., மேலிடம்.

இதனால், கவலையில் மூழ்கியுள்ள சிவ்ராஜ் சிங் சவுகான், 'என் குடும்பத்துக்கும், அரசியலுக்கும்உள்ள தொடர்பு, என்னுடன் முடிந்து விடும் போலிருக்கிறது...' என, நொந்து போயிருக்கிறார்.






      Dinamalar
      Follow us