உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 30, 2026 01:14 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
பலவீனமாகும் ஆற்றங்கரை
அதிகரிக்கும் கான்கிரீட் தேவைக்கு அதிகமாக மணல், கற்கள் எடுக்கப்படுகிறது. இதனால் ஆற்றங்கரைகள் பலவீனமாகி வருகிறது என ஆய்வு எச்சரித்துள்ளது. 2024 ல் உலகில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக 2800 கோடி டன் மணல், சரளை கற்கள் கான்கிரீட்டாக மாற்றப்பட்டன. 1974-ல் இருந்து இத்தகைய தரவுகளை ஆய்வு செய்ததில், 2000க்குப்பின் இவற்றுக்கான தேவை இருமடங்கு அதிகரித்து உள்ளது. இதில் 80 சதவீதம் மணல், கற்கள் தேவை என்பது, நகர்ப்புற மேம்பாடு, சாலை வசதி ஏற்படுத்துதல், ஆகியவற்றுக்காக சீனா, இந்தியா உட்பட ஆசியாவில் தான் உள்ளது.
