உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 06, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
வறட்சியை தாங்கும் மரங்கள்
தாவரங்கள் செழிப்புக்கு சூரிய ஒளி, கார்பன் டை ஆக்சைடு உடன் தண்ணீர் அவசியம். வறட்சியில் உயரமான மரங்களிடம், தண்ணீரை உச்சிக்கு கொண்டு செல்வது கடினமாக இருக்கும். இது குறித்து மலேசிய காடுகளில் 'டிப்டெரோகார்ப்' வகை மரங்களில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள், 'இலைகள் மற்றும் தண்ணீரை கொண்டு செல்லும் குழாய்களில் (சைலம்) சில மாற்றங்களை செய்வதன் வழியாக, இப்பிரச்னையில் இருந்து அவை தப்புகின்றன' என கண்டறிந்துள்ளனர். ஆனால் அனைத்து வகை மரங்களுக்கும் இது பொருந்துமா என்பது உறுதியில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
