PUBLISHED ON : மார் 12, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை திருநகர் - விளாச்சேரி ரோடு ஜோசப்நகர் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திர நிலையத்திலிருந்து மக்களுக்கு இலவச குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
இரண்டு மாதங்கள் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்ட நிலையில் நிலையம் பூட்டப்பட்டது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாநகராட்சி தரப்பில் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு நேற்று முன்தினம் முதல் மக்களுக்கு குறிப்பிட்ட நேரம் குடிநீர் வழங்கப்படுகிறது.

