sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

பொன்னேரிக்கரை மேம்பால சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் அகற்றம்

/

பொன்னேரிக்கரை மேம்பால சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் அகற்றம்

பொன்னேரிக்கரை மேம்பால சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் அகற்றம்

பொன்னேரிக்கரை மேம்பால சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் அகற்றம்


PUBLISHED ON : ஏப் 27, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 27, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில் இருந்து, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் பொன்னேரிக்கரை ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று வருகின்றன.

இந்நிலையில், மேம்பாலத்தின் தடுப்புச்சுவரின் இருபுறமும் அரசியல் கட்சியினர் மற்றும் வர்த்தக நிறுவனத்தினர் ‛போஸ்டர்' ஒட்டி இருந்தனர்.

வாகன ஓட்டிகளை திசை திருப்பும் வகையில், மேம்பால சுவரில் இருபுறமும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, ரயில்வே மேம்பால சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் நேற்று முன்தினம் வெளியானது. இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் உபகோட்டம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு நெடுஞ்சாலைத் துறையினர், பொன்னேரிக்கரை மேம்பாலத்தின் இருபுறமும் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சியினர் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் போஸ்டரை நேற்று அகற்றினர்.






      Dinamalar
      Follow us