sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

பரிசுகளை அள்ளி குவித்த காளை; ரூ.18 லட்சத்துக்கு விற்பனை

/

பரிசுகளை அள்ளி குவித்த காளை; ரூ.18 லட்சத்துக்கு விற்பனை

பரிசுகளை அள்ளி குவித்த காளை; ரூ.18 லட்சத்துக்கு விற்பனை

பரிசுகளை அள்ளி குவித்த காளை; ரூ.18 லட்சத்துக்கு விற்பனை


ADDED : ஜூலை 02, 2024 10:52 PM

Google News

ADDED : ஜூலை 02, 2024 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயபுரா : கர்நாடகாவில், பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்த, காளை மாடு 18 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், விஜயபுரா பபலேஸ்வர் பாபலாடி கிராமத்தில் வசிப்பவர் ரமண கவுடா பாட்டீல். இவர் 5.5 அடி உயரமுள்ள காளை மாட்டை வளர்த்தார்.

வட மாவட்டங்களில் நடக்கும் தேரபந்தி எனும் காளை ஓட்ட பந்தய போட்டிகளில், இந்த காளை மாடு பங்கேற்று, பல பரிசுகளை வென்றுள்ளது. இதுவரை 15 லட்சம் ரொக்கம்; 40 கிராம் தங்கம்; இரண்டு வெள்ளி மாலைகள்; நான்கு பைக்குகளை இந்த காளை மாடு வென்றுள்ளது.

இந்நிலையில், பெலகாவியின் ராய்பாக் ஹிட்னல் கிராமத்தைச் சேர்ந்த சதாசிவா என்ற விவசாயியை, இந்த காளை மாடு கவர்ந்தது. அந்த காளை மாட்டை வாங்க, உரிமையாளர் ரமண கவுடா பாட்டீலிடம் கேட்டார். அவரோ, 'காளையை விற்பதில்லை' என்று கூறிவிட்டார்.

ஆனாலும், சதாசிவா தொடர்ந்து வற்புறுத்தியதால், காளையை விற்க ஒப்புக்கொண்டார். இறுதியாக, 18 லட்சத்து 100 ரூபாய் கொடுத்து, சதாசிவா நேற்று காளையை வாங்கி சென்றார்.






      Dinamalar
      Follow us