sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

கணக்கெடுப்பில் 12,000 பறவைகள்: கடந்த ஆண்டை விட 5000 அதிகம்  

/

கணக்கெடுப்பில் 12,000 பறவைகள்: கடந்த ஆண்டை விட 5000 அதிகம்  

கணக்கெடுப்பில் 12,000 பறவைகள்: கடந்த ஆண்டை விட 5000 அதிகம்  

கணக்கெடுப்பில் 12,000 பறவைகள்: கடந்த ஆண்டை விட 5000 அதிகம்  


UPDATED : மார் 05, 2024 03:15 PM

ADDED : மார் 05, 2024 05:31 AM

Google News

UPDATED : மார் 05, 2024 03:15 PM ADDED : மார் 05, 2024 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 25 இடங்களில் நடத்திய ஆய்வில் 141 பறவை இனங்களை சேர்ந்த 12,000 பறவைகள் வசிப்பதாக கண்டறிந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் சிவகங்கையில் பறவைகள் எண்ணிக்கை 5 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.

சிவகங்கை மாவட்ட வன அலுவலர் பிரபா தலைமையில், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள், பறவையியல் ஆர்வலர்கள், புகைப்பட நிபுணர்களை கொண்டு நிலப்பரப்புகளில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு மார்ச் 3 அன்று ஒரே நாளில் 25 இடங்களில் நடத்தப்பட்டது.

ஆய்வின் மூலம் மாவட்ட அளவில் 141 பறவை இனங்களை சேர்ந்த 12,000 க்கும் மேற்பட்ட பறவைகள் வசிப்பதை கண்டறிந்துள்ளனர்.

கடந்த ஆண்டு கணக்கெடுப்பில் 69 பறவை இனங்களை சேர்ந்த 7,000 பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த ஆண்டு 'மெர்லின்' ஆப் உதவியுடன் நடத்திய ஆய்வில், மேலும் கூடுதலாக பறவைகள் இருப்பதை கண்டறிய முடிந்தது.

நீர்நிலைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால், பெரும்பாலான பறவைகள் ஆங்காங்கே கூடுகள் கட்டி இனப்பெருக்கம் செய்துள்ளன.

இதன் மூலம் இம்மாவட்டத்தில் வசிக்கும் உள் நாட்டு பறவைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 12,000 ஆக அதிகரித்துள்ளன என வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

பறவைகள் ஆய்வில் ரேஞ்சர் கார்த்திகேயன், வனவர் பிரவீன்ராஜ், சேதுபாஸ்கரா விவசாய கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் சிங்கம்புணரி அரசு ஆண்கள், மகளிர் மேல்நிலை பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.

ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர், மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழை மாவட்ட வன அலுவலர் பிரபா வழங்கினார்.






      Dinamalar
      Follow us