/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
மகளிர் உதவித்தொகை பணத்தில் கோவிலுக்கு ரூ.2.50 லட்சம் நன்கொடை
/
மகளிர் உதவித்தொகை பணத்தில் கோவிலுக்கு ரூ.2.50 லட்சம் நன்கொடை
மகளிர் உதவித்தொகை பணத்தில் கோவிலுக்கு ரூ.2.50 லட்சம் நன்கொடை
மகளிர் உதவித்தொகை பணத்தில் கோவிலுக்கு ரூ.2.50 லட்சம் நன்கொடை
ADDED : மார் 02, 2026 01:34 AM

கதக்: கர்நாடகாவில் கோவில் கட்டுமானத்துக்காக, 100 பெண்கள் சேர்ந்து, 'கிரஹலட்சுமி' திட்டத்தில் மாநில அரசு மாதந்தோறும் வழங்கும் பணத்தில், 2.50 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளனர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 'கிரஹலட்சுமி' என்ற பெயரில் மாதந்தோறும் பெண்களுக்கு 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கதக் மாவட்டம், திம்மாபூர் கிராமத்தில், கிராமத்தினர் சேர்ந்து ரேணுகா எல்லம்மா தேவி கோவில் கட்டி வருகின்றனர். இதற்காக, 50 லட்சம் ரூபாய் செலவழித்து உள்ளனர். ஆயினும் போதிய நிதியின்றி, நான்கு ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடக்கவில்லை. கோவிலை கட்டி முடிக்க இன்னும், 16 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
இதையடுத்து, கிராமத்தில் உள்ள பெண்கள் ஆலோசித்து, அரசின் கிரஹலட்சுமி திட்டத்தில் கிடைக்கும் பணத்தில் கோவில் கட்டுமான பணிக்கு நன்கொடை வழங்க முடிவு செய்தனர்.
இக்கிராமத்தில், 850 பெண்கள் கிரஹலட்சுமி பயனாளிகளாக உள்ளனர். இவர்களில், 100 பேர், பிப்ரவரி மாதத்தின் கிரஹலட்சுமி பணம் மற்றும் தங்களது சொந்த பணத்தையும் சேர்த்து, 2.50 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கி உள்ளனர்.
'கிராமத்தில் உள்ள அனைத்து கிரஹலட்சுமி பயனாளிகளும் இவ்வாறு நன்கொடை வழங்கினால், 16 லட்சம் ரூபாய் கிடைத்து, கோவில் திருப்பணி முடிந்துவிடும்' என்று கிராமத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

