sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

வீட்டை விட்டு ரூ.17 லட்சத்துடன் மாயமான பிளஸ் 1 மாணவன் மீட்பு

/

வீட்டை விட்டு ரூ.17 லட்சத்துடன் மாயமான பிளஸ் 1 மாணவன் மீட்பு

வீட்டை விட்டு ரூ.17 லட்சத்துடன் மாயமான பிளஸ் 1 மாணவன் மீட்பு

வீட்டை விட்டு ரூ.17 லட்சத்துடன் மாயமான பிளஸ் 1 மாணவன் மீட்பு

3


UPDATED : ஏப் 18, 2025 04:59 AM

ADDED : ஏப் 18, 2025 01:40 AM

Google News

UPDATED : ஏப் 18, 2025 04:59 AM ADDED : ஏப் 18, 2025 01:40 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: வீட்டில் கோபித்துக்கொண்டு, 17 லட்சம் ரூபாயுடன் சேலம் வந்த பிளஸ் 1 மாணவனை, ஆட்டோ டிரைவர் மீட்டு, போலீசில் ஒப்படைத்தார்.

சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம் காலை, கையில் பையுடன் வந்த பள்ளி மாணவன், அங்கு நின்றிருந்த சேலம், சின்னதிருப்பதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜமாணிக்கம் ஆட்டோவில் ஏறி, 'தங்குவதற்கு விடுதி கிடைக்குமா?' எனக் கேட்டுள்ளார்.

மேலும், 'எனக்கு யாரும் இல்லாததால், வேலை வாங்கித் தர முடியுமா?' என்றும் கேட்டுள்ளார். ஆட்டோ டிரைவர், அந்த மாணவனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரித்த போது, பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மாணவனை கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்.

போலீசார், மாணவனிடம் விசாரணை நடத்திய பின், பையில் இருந்த பணத்தை எண்ணியபோது, 17 லட்சத்து, 65,000 ரூபாய் இருந்தது. அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் அஸ்வினி, சிறுவனிடம் விசாரித்தார்.

அப்போது, சிறுவன், உளுந்துார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 1 படித்ததும், சிறுவனின் தந்தை சத்தியநாராயணன் கள்ளக்குறிச்சியில் லேத் பட்டறை வைத்திருப்பதும் தெரியவந்தது.

தற்போது விடுமுறையில் வீட்டில் உள்ள மகனிடம், பட்டறையில் வேலை செய்ய வருமாறு தந்தை கூறியுள்ளார். இதில், கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்த, 17 லட்சத்து, 65,000 ரூபாயை எடுத்துக் கொண்டு, மாணவன் சேலம் வந்தது தெரியவந்தது.

மாணவனுக்கு அறிவுரை கூறிய போலீசார், அவனது தந்தையிடம் ஒப்படைத்தனர். ஆட்டோ டிரைவர் ராஜமாணிக்கத்திற்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us