sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'தாம்துாம் என குதித்திருப்பாரே!'

/

'தாம்துாம் என குதித்திருப்பாரே!'

'தாம்துாம் என குதித்திருப்பாரே!'

'தாம்துாம் என குதித்திருப்பாரே!'

2


PUBLISHED ON : மே 08, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 08, 2025 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெற்கு ரயில்வே சார்பில், மதுரையில் எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க தமிழகம், கேரளாவை சேர்ந்த 18 எம்.பி.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது; ஆனால், இதில், 11 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

தி.மு.க.,வைச் சேர்ந்த துாத்துக்குடி கனிமொழி, காங்கிரசை சேர்ந்த கரூர் ஜோதிமணி, சிவகங்கை கார்த்தி உட்பட ஏழு பேர் பங்கேற்கவில்லை. இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற வைகோவிடம், 'உங்கள் கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் உட்பட ஏழு பேர் வரவில்லையே?' என, நிருபர்கள் கேட்டனர். அதற்கு, சிரிப்பையே பதிலாக தந்தவர், 'அவங்களுக்கு என்ன வேலையோ' எனக் கூறி சமாளித்தார்.

நிருபர் ஒருவர், 'இதுவே எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பங்கேற்காமல் இருந்தால், இந்நேரம் தாம்துாம் என வைகோ கொந்தளித்து இருப்பாரே... இவங்களுக்கு வந்தால் ரத்தம்; மத்தவங்களுக்கு என்றால் தக்காளி சட்னியா...' எனக் கூற, சக நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.






      Dinamalar
      Follow us