/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஜாமினில் வந்த ரவுடி கிணற்றில் சடலமாக மீட்பு
/
ஜாமினில் வந்த ரவுடி கிணற்றில் சடலமாக மீட்பு
PUBLISHED ON : செப் 03, 2024 12:00 AM
படப்பை, படப்பை அடுத்த, ஆதனுார் பிரதான சாலை, மகாலட்சுமி நகரில் சாலையோர கிணற்றில் இறந்த நிலையில் ஆண் சடலம் மிதந்தது.
மணிமங்கலம் போலீசார், ஒரகடம் தீயணைப்பு துறை வீரர்களுடன் இணைந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், இறந்தவர் ஆதனுார் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த ரவுடி தனசேகர், 27, என்பது தெரிய வந்தது.
நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக பதிவு செய்யப்பட்ட தனசேகர், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர். நான்கு மாதங்களுக்கு முன் ஜாமின் பெற்று வெளியே வந்தார்.
முன்பகை காரணமாக தனசேகர் கொலை செய்யப்பட்டு உடலை கிணற்றில் வீசினாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.