sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

 சொர்க்கவாசல் திறக்க தயாராகிறது காரமடை அரங்கநாதர் கோயில்

/

 சொர்க்கவாசல் திறக்க தயாராகிறது காரமடை அரங்கநாதர் கோயில்

 சொர்க்கவாசல் திறக்க தயாராகிறது காரமடை அரங்கநாதர் கோயில்

 சொர்க்கவாசல் திறக்க தயாராகிறது காரமடை அரங்கநாதர் கோயில்


PUBLISHED ON : டிச 28, 2025 05:14 AM

Google News

PUBLISHED ON : டிச 28, 2025 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம், காரமடை அரங்கநாதர் கோயிலில், 30ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பு நடைபெற உள்ளது.

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பு விழா, வெகு விமர் சையாக நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல் பத்து உற்சவம் 20ம் தேதி துவங்கியது. 29ம் தேதி இரவு நாச்சியார் திருக்கோலத்தில், அரங்கநாதர் பெருமாள் எழுந்தருள உள்ளார். அதைத் தொடர்ந்து, 30ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. அன்று இரவு, 11:00 மணிக்கு திருவாய்மொழி திருநாள் என்னும் ராபத்து உற்சவம் துவங்க உள்ளது.

ஜனவரி 6ம் தேதி குதிரை வாகனத்தில் திருமங்கை மன்னன் வேடு பரியும், எட்டாம் தேதி திருவாய் மொழித் திருநாள் சாற்று முறை உற்சவம் பூர்த்தியும் நடைபெற உள்ளது. கோலாகலமான விழாவுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் பேபி ஷாலினி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us