sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

டீ கடை பெஞ்சு

/

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு


PUBLISHED ON : ஆக 29, 2011 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 29, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீதியில் மாஜி மந்திரி...

'அடக்கி' வாசிக்க கட்சியினருக்கு உத்தரவு!



''கோடநாடு பக்கம் யாரும் தலை காட்டக் கூடாதுன்னு, உத்தரவு பிறப்பிச்சிருக்காருங்க...!'' என, முதல் ஆளாக விவாதத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.''யாரு பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.''அந்த மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மந்திரி தான், இப்படி சொல்லிருக்காருங்க... தி.மு.க., ஆட்சியில, ஜெயலலிதா, கோடநாட்டுக்கு போகும்போதெல்லாம் ரொம்ப குடைச்சல் கொடுத்தாங்க... ஜெ., பங்களா இருக்கற கோடநாடு, குன்னூர் தொகுதியில வருது... கதர்வாரிய மாஜி அமைச்சர் தான், இந்த தொகுதி எம்.எல்.ஏ.,வா இருக்காருங்க...



''இந்நிலையில, உடன்பிறப்புகளுக்கு உருக்கமா ஒரு உத்தரவு பிறப்பிச்சிருக்காருங்க... 'கோடநாடு பகுதியில, நம்மாளுங்க எந்தப் பிரச்னையும் செஞ்சிடக் கூடாது... சின்ன கல்லை எறிஞ்சாக் கூட, தொகுதி எம்.எல்.ஏ.,வான எனக்குத் தான் பிரச்னை வரும்... அதனால, எல்லாரும் அமைதியா இருங்க'ன்னு, கெஞ்சி கேட்டுக்கிட்டாருங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''ஸ்டாக்' வைச்சுண்டு இருக்கற இலவச, 'டிவி'க்களை எல்லாம், உள்ளாட்சித் தேர்தலுக்கு வினியோகம் பண்ண திட்டமிட்டிருக்கா ஓய்...'' என, அடுத்த மேட்டருக்குள் நுழைந்தார் குப்பண்ணா.



''விளக்கமா சொல்லும் வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

''சட்டசபை தேர்தலுக்கு முன், அரசின் இலவச, 'டிவி'க்களை, கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மூலமா தி.மு.க., அரசு வினியோகம் பண்ணியது ஓய்... ஆனாலும், தேர்தல் கமிஷன் கெடுபிடி காரணமா, முழு அளவுல வினியோகம் பண்ண முடியலை... அதனால, ஏராளமான, 'டிவி' பெட்டிகள், இன்னமும் அவா கன்ட்ரோல்ல தான் இருக்காம்... அதையெல்லாம், உள்ளாட்சித் தேர்தலையொட்டி வினியோகம் பண்ணலாம்னு திட்டமிட்டிருக்கா...

''இந்த விஷயம், ஆளுங்கட்சிக்கு, 'லீக்' ஆயிடுத்து ஓய்... யார், யார் வீட்டுல அரசு, 'டிவி' பெட்டிகளை பதுக்கி வைச்சிருக்கான்னு, அ.தி.மு.க.,காரா விசாரணை நடத்திண்டு இருக்கா... ஆனாலும், இரவோடு இரவா, இலவச, 'டிவி'க்களை வழங்க, தி.மு.க., முடிவு பண்ணிருக்கு ஓய்...'' என்றார் குப்பண்ணா.



''யார் தப்பு செஞ்சாலும் கண்டுக்கக் கூடாதுன்னு, ரெண்டு தரப்பும் ஒப்பந்தம் செஞ்சிருக்கு பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.

''விவரமா சொல்லுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''சுதந்திர தின பாதுகாப்புக்காக, மெட்ராஸ் ஏர்போர்ட்டுல இருபது நாளா பார்வையாளர்கள் உள்ளே போக தடை விதிச்சிருந்தாங்க... இதுல ஒரு நாள், ஏர்போர்ட் ஊழியர்கள் மூணு பேர், தங்களுக்கு வேண்டிய ஒரு பெண்ணை எந்த பாசும் இல்லாம உள்ள அழைச்சிட்டு வந்தாங்க...''இந்த விவகாரத்தால, சி.ஐ.எஸ்.எப்., போலீசுக்கும், ஏர்போர்ட் மேனேஜருக்கும் வாக்குவாதம் நடந்திருக்கு பா... கடைசியில, 'இனிமே யார் தப்பு செஞ்சாலும் ஒருத்தருக்கொருத்தர் கண்டுக்காம இருந்துடலாம்'னு, ரெண்டு தரப்பும் ஒப்பந்தம் செஞ்சிகிட்டாங்க...'' எனக் கூறிவிட்டு, அன்வர்பாய் நடையைக்கட்ட, மற்ற பெரியவர்களும் புறப்பட்டனர்.








      Dinamalar
      Follow us