sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

 பூத்துக்குலுங்கும் அற்புத மூலிகை ஆவாரம் பூ

/

 பூத்துக்குலுங்கும் அற்புத மூலிகை ஆவாரம் பூ

 பூத்துக்குலுங்கும் அற்புத மூலிகை ஆவாரம் பூ

 பூத்துக்குலுங்கும் அற்புத மூலிகை ஆவாரம் பூ


PUBLISHED ON : ஜன 07, 2026 05:45 AM

Google News

PUBLISHED ON : ஜன 07, 2026 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் மருத்துவ குணம் கொண்ட அற்புத மூலிகையான ஆவாரம் பூக்கள் அதிகளவில் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளது.

'ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ' என்று ஆவாரம் பூவின் மருத்துவ குணங்களை பழமொழி வழியாக நம் முன்னோர் கூறியதை அறியலாம்.

குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான மலர்களில் ஆவாரையும் ஒன்று. பொன் மஞ்சள் நிறத்தில் தரிசு நிலங்களிலும், வயல் வரப்புகளிலும் வறட்சியான காலங்களில் கூட தன்னிச்சையாக வளர்ந்து பூத்துக் காய்த்து தொங்கும் இந்த செடிக்கு மருத்துவ குணங்கள் அதிகம்.

இதன் பூ, காய், பட்டை, வேர், இலை என ஐந்து பாகங்களும் பல்வேறு மருத்துவத்திற்கு பயன்படுகிறது. இந்த ஆவாரம் பூக்கள் சிங்கம்புணரி பகுதியில் தற்போது அதிக அளவில் பூத்துக் குலுங்குகிறது. குறிப்பாக வேங்கைப்பட்டி, பிரான்மலை உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் இப்பூக்களாகவே தெரிகிறது.

தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் போது காப்பு கட்டுவதற்கும் வீட்டு வாசலிலும் இப்பூக்களை தோரணமாக தொங்கவிடுவர்.

இப்பகுதியில் போதிய மழை இல்லாமல் விவசாயம் பொய்த்து பகுதியில் வேலைவாய்ப்பற்ற விவசாய கூலித் தொழிலாளர்கள் இந்த பூக்களை பறித்து சித்த மருத்துவக் கம்பெனிகளுக்கு விற்று பணம் சம்பாதித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us