/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சுகாதார நிலைய நுழைவாயிலில் தடுப்பு இல்லாத வடிகால்வாய்
/
சுகாதார நிலைய நுழைவாயிலில் தடுப்பு இல்லாத வடிகால்வாய்
சுகாதார நிலைய நுழைவாயிலில் தடுப்பு இல்லாத வடிகால்வாய்
சுகாதார நிலைய நுழைவாயிலில் தடுப்பு இல்லாத வடிகால்வாய்
PUBLISHED ON : ஏப் 08, 2025 12:00 AM

ஸ்ரீபெரும்புதுார்,ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சுங்குவார்சத்திரம் அருகே, மொளச்சூர் கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுங்குவார்சத்திரம், மொளச்சூர், திருமங்கலம், சோகண்டி, சிறுமாங்காடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் நாள்தோறும் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இந்த நிலையில், ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயிலில், திறந்தவெளி மழைநீர் கால்வாய் உள்ளது. மழைநீர் கால்வாய் மீது செல்லும் சாலையின் இருபுறமும் தடுப்பு இல்லை. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழலில் சென்று வருகின்றனர்.
எதிதெிரே வாகனங்கள் வரும் போது, கால்வாயோரம் செல்லும் வாகனங்கள், நிலைத் தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
அதேபோல, விபத்தில் சிக்கி முதலுதவி சிகிச்சைக்காக, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் ஆம்புலன்ஸ், மழைநீர் கால்வாயில் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றன.
எனவே, மொளச்சூர் ஆரம்ப சுகாதார நிலைய நுழைவாயிலில் உள்ள மழைநீர் வடிகால் மீது தடுப்பு அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.