PUBLISHED ON : நவ 07, 2020

அ நிறம் | அளவு
கறுப்பினத்தவரின் அடிமைத் தளையை அறுத்தெறிந்தவர் அமெரிக்க குடியரசு தலைவராக இருந்த ஆபிரகாம் லிங்கன். இளமைப் பருவத்தில், நண்பருடன் சேர்த்து வாணிபம் செய்தார்.
நண்பர் நேர்மையானவர் அல்ல; வரவுக்கு மிஞ்சி செலவு செய்தார். மது போதையில் மூழ்கியிருந்தார். மிதமிஞ்சிக் கடன் வாங்கும் பழக்கம் ஏற்பட்டது. கடைசியில், தீராத நோய்க்கு ஆளாகி உயிர் இழந்தார்.
அவர் வாங்கியிருந்த கடன் பூதமாக வளர்ந்திருந்தது. அது லிங்கனைக் கட்டுப்படுத்தாது.
'நண்பரின் கடனுடன் எவ்வித தொடர்பும் இல்லை...' என தப்பித்திருக்கலாம் லிங்கன்; ஆனால் அப்படி செய்யவில்லை.
கடனுக்கு பொறுப்பேற்று, அதை தீர்க்க, முழு மூச்சாக உழைத்தார். பொறுப்புணர்ச்சியுடன், சிக்கனமாக வாழ்ந்து பணம் சேர்த்தார். இவ்வாறு சேர்த்த பணத்தில், முழுக் கடனையும் அடைத்தார். வாழ்வில் அமைதியுடன் உயர்ந்தார்.
