PUBLISHED ON : நவ 07, 2020

என் வயது, 78; தினமலர் நாளிதழ், 10 ஆண்டுகளாக படித்து வருகிறேன். பொழுது போக்காக, சிறுவர்மலர் இதழை புரட்ட ஆரம்பித்தேன்.
சிறுகதைகள், 'அதிமேதாவி அங்குராசு!' பகுதிகளை தான் முதலில் படித்தேன்; சுவாரசியமாக இருந்தது. இப்போதெல்லாம் ஆவல் மிகுதியால் புத்தகம் முழுவதையும் ஒரே மூச்சில் படித்து விடுகிறேன்.
பேசாத ஓவியங்களாக, 'உங்கள் பக்கம்!' பகுதியும், முன், பின் அட்டையில், மனதை கொள்ளை கொள்ளும் பேசும் ஓவியங்கள் உள்ளன. மனதை தெளிய வைக்கும், 'இளஸ்... மனஸ்...' பகுதி அருமை!
'அடடா... சுவை மிக்க பெட்டகத்தை இத்தனை நாள் படிக்காமல் விட்டோமே' என்ற ஞானம் ஏற்பட்டதால், சனிக்கிழமை சிறுவர்மலர் இதழுக்கு பின்தான், நாளிதழ் படிக்கிறேன்.
'வீ டூ லவ் சிறுவர்மலர்!' என, பெருமிதமடையும் பெரிய சிறுவர்களில் ஒருவனாகி விட்டேன்.
- எம்.எஸ்.மாரியப்பன், சென்னை.
தொடர்புக்கு: 94447 54071
