PUBLISHED ON : டிச 11, 2015

அ நிறம் | அளவு
மடகாஸ்கரிலிருந்து வடக்கு கடற்கரையை ஒட்டி, கடலில் 15 தீவுகள் உள்ளன. இவற்றில் ஒன்றில் இயற்கை அதிசயத்தை காணலாம். ஆமாம்... இந்த மலையில் நூற்றுக்கணக்கான, 'ஆர்கான் பைப்புகள்' போன்ற செங்குத்தான வடிவங்களை காணலாம். இவை 20 மீட்டர் உயரம் கொண்டவை.
இந்த மலை எரி குழம்பை கக்கிய போது, இந்த செங்குத்தான துவாரங்களின் மூலம் இவை வெளியேறியுள்ளன. இவை நடந்து 1.25 மில்லியன் வருடங்கள் இருக்கலாம் என கணக்கிட்டுள்ளனர். ஆனால், இந்த நீண்ட துவாரங்கள்... செம்புத் தூண்கள் போல் ஜொலிப்புடன் நிற்கின்றன.
ஆனால்... இந்த இயற்கை அதிசயத்தைக் காண பெரும் கூட்டம் வருவதில்லை. காரணம்... இதனை பார்க்க ஒரே வழி... படகில்தான் செல்ல வேண்டும்... இருந்தாலும் பார்க்க வேண்டிய அதிசயம் இது!
- ராஜிராதா.
