sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

துல்லியம்!

/

துல்லியம்!

துல்லியம்!

துல்லியம்!


PUBLISHED ON : செப் 18, 2021

Google News

PUBLISHED ON : செப் 18, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில், வடசேரி, அரசு நடுநிலைப் பள்ளியில், 1977ல், 5ம் வகுப்பு படித்தாள் என் மகள்.

அப்போது, திருச்சி லால்குடியில் பணிபுரிந்தேன்; விடுப்பில் வீட்டிற்கு வந்தபோது, ஆசிரியை அடித்து விட்டதாக கூறி அழுதாள்; சமாதானம் செய்தேன்.

விசாரிப்பதற்காக மறுநாள் பள்ளிக்கு சென்றேன். வகுப்பு ஆசிரியையை கண்டதும் வியப்படைந்தேன். எனக்கு, 8ம் வகுப்பில் கற்பித்த ஆசிரியை லட்சுமி.

இருப்பினும், அடையாளம் தெரியாத மாதிரி, 'என் மகளை ஏன் அடிச்சீங்க...' என கேட்டேன். சிரித்தபடி, 'படிக்காமல், விளையாடியதால் அடித்தேன்...' என்றவர், 'சரி நாராயணா... நீ எப்படி இருக்கிறாய்... என்ன வேலை செய்கிறாய்; உன் மூத்த மகளா இவள்...' என கேள்விகளை அடுக்கினார்.

பல ஆண்டுகளுக்குப் பின்னரும், என்னை துல்லியமாக நினைவில் வைத்திருந்தது, மிகவும் மகிழ்ச்சி தந்தது. நலம் விசாரித்து விடைபெற்றேன். இப்போது என் வயது, 78; அந்த நிகழ்வை நினைத்தவுடன் பூரிப்படைகிறேன்!

- டி.வி.எ.நாராயணன், சென்னை.

தொடர்புக்கு: 92832 10038






      Dinamalar
      Follow us