PUBLISHED ON : ஜூலை 29, 2023

அ நிறம் | அளவு
செயற்கை குளிர்பானத்தில் அதிக அளவில் சர்க்கரை கலந்திருக்கும். எந்த ஊட்டச்சத்தும் இருக்காது; இதை குடித்தால் சர்க்கரை நோய், மாரடைப்பு, எலும்பு அடர்த்தியின்மை போன்ற பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு.
செயற்கை குளிர்பான தயாரிப்பில், 'ஆஸ்பர்டேம்' என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இது, சர்க்கரைக்கு மாற்றாக, இனிப்புச் சுவையை தருகிறது. இந்த வேதிப்பொருளால் மூளையில் கட்டி, இதய கோளாறு உருவாக வாய்ப்பு உண்டு.
செயற்கை குளிர்பானத்தை தவிர்த்து, இளநீர், நுங்கு, பழச்சாறு சாப்பிட்டு உடலை பாதுகாத்து, ஆரோக்கியமுடன் வாழலாம்!
- பி.சி.ரகு
