PUBLISHED ON : ஜூன் 19, 2021

கரப்பான் பூச்சி, நோய் தீர்க்கும் அரிய மருந்து தயாரிக்க உதவுகிறது.
ஆச்சரியமாக உள்ளதா...
உண்மை தான். முக்கியமாக, 'பிராங்கியல் ஆஸ்துமா' என்ற நோய்க்கு மருந்தாகிறது. இடைவிடாத மூச்சுத் திணறலால் அவதிப்படும் நோயாளியின் இன்னலைத் தீர்க்க இந்த மருந்து உதவுகிறது.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்தவர் டாக்டர் கிரிஸ்டியன் பிரட்ரிக் சாமுவேல் ஹானிமன்; அலோபதி மருத்துவத்தில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். மருத்துவத்தில் தீவிரமாக ஆராய்ச்சி செய்து, 'ஹோமியோபதி' என்ற மருத்துவமுறையை அறிமுகம் செய்தார்.
இந்த மருத்துவ முறையில், பிராங்கியல் ஆஸ்துமா நோய்க்கு, 'பிளாட்டா ஒரியன்டாலிஸ்' என்ற மருந்து உள்ளது. இது, கரப்பான் பூச்சியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட நோயாளி மூச்சுத் திணறலால் திக்குமுக்காடும் போது, பிளாட்டா ஒரியன்டாலிஸ் என்ற மருந்து திரவத்தை, உரிய முறையில், மருத்துவரின் ஆலோசனைப்படி வழங்கலாம்.
அலோபதி மருத்துவத்தில், ஊசி மூலம் மருந்து செலுத்தி மட்டுமே தடுக்க முடியும் என்ற நிலையிலுள்ள நோயாளியின் மூச்சுத் திணறலைக் கூட, கரப்பான் பூச்சி மருந்தால் எளிதாக தணிக்கலாம்.
ஒரு கரப்பான் பூச்சியின் தலையை, உடலில் இருந்து மிகச்சரியாக அறுத்து, அகற்றி விட்டாலும், பல வாரங்கள் உயிர் வாழும் திறன் கொண்டது. பின், உணவு உட்கொள்ள முடியாமல் தான் அது இறக்கிறது; அதாவது, பசியால் தான் மரணமடைகிறது.

