PUBLISHED ON : பிப் 06, 2021

அ நிறம் | அளவு
இடி புளிக்கும்!
இடி இடிக்கும் போது, பால் புளித்துப் போய் விடும். இதற்கு காரணம், பாலில் காணப்படும், 'லேக்டிக்' என்ற நுண்ணுயிரி தான். இடி இடிக்கும் போது, வெப்பம் அதிகரிக்கும். இந்த வெப்பத்தால், லேக்டிக் நுண்ணுயிரி அமிலத்தை உருவாக்கும். இது தான், பால் புளித்துப் போவதன் ரகசியம்.
மின்னல் உரம்!
மின்னலால், விவசாயிகள் நன்மை பெறுகின்றனர்.
வானில் மின்னல் பாயும் போது, மிகுந்த வெப்பம் ஏற்படுகிறது. அந்த வெப்பம் காற்றிலிருந்து, நைட்ரஜனை பிரிக்கிறது. இந்த நைட்ரஜன், மழை நீருடன் கலந்து, நிலத்தில் சேருகிறது. அது, தாவரங்களுக்கு மிகச்சிறந்த உரமாகிறது. இயற்கை அற்புதமானது. அதனிடமிருந்து கற்போம்.
