
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனித உடலுக்கு தேவையான உயிர் சக்தியை தர வல்லது நெய். இதை ஆயுர்வேத மருத்துவம், 'தங்க திரவம்' என புகழ்கிறது.
நெய் மணமுள்ள உணவு பொருள்; அன்றாடம் சமையலுக்கும், பூஜை பொருளாகவும் பயன்படுத்துகிறோம். பசு, எருமை பாலில் இருந்து நெய் கிடைக்கிறது. அடர்த்தியான மஞ்சள் நிறம் முதல், வெளிர் மஞ்சள் நிறம் வரை காணப்படும்.
நெய்யில் உள்ள, 'ஒலியிக் அமிலம்' பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றலுடையது; பெருங்குடலையும் சுத்தம் செய்யும்.
பசுநெய், நாள்ப்பட்ட இருமலை குணமாக்கும்; பார்வையை மேம்படுத்தும். பற்களை உறுதிப்படுத்தும்.
தினமும் உணவில் நெய் சேர்த்தால், இளமை மேம்படும். நினைவாற்றலை துாண்டும். சிறப்பு மிக்க நெய்யை, உணவில் அளவுடன் சேர்த்து நலம் பெறலாம்.
- வி.ராஜேந்திரன்

