PUBLISHED ON : மே 24, 2013
அ நிறம் | அளவு
ஒருநாள் ஒட்டக்கூத்தரும், கம்பரும் ஆற்றங்கரை ஒன்றின் படித்துறையில், கொஞ்சம் தள்ளித் தள்ளி நின்று, கால், முகம் கழுவிக் கொண்டு இருந்தனர். அப்போது தண்ணீர், ஒட்டக்கூத்தர் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து, கம்பர் நின்று கொண்டிருந்த இடம் நோக்கிப் போய்க்கொண்டு இருந்தது.
இதைக் கண்ட ஒட்டக்கூத்தர், சற்று குறும்பாக 'கம்பரே, நான் கழுவின கழுநீர் தான் உனக்கு வருகிறது பார்த்தீரா?' என்று கேட்டார்.
அதைக் கேட்ட கம்பர், ''அட! நீரே வந்து என் காலில் விழுந்தால், இது விதிப் பயன், நான் என்ன செய்வது?' என்று சிலேடையாகச் சொல்லி நகைப்பூட்டினார்.
