
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் - 2
புதினா - கைப்பிடி
இஞ்சி - 1 துண்டு
பாதாம் பிசின், தண்ணீர், தேன் - தேவையான அளவு.
செய்முறை:
விதை நீக்கிய நெல்லிக்காய், சுத்தம் செய்த புதினா மற்றும் தோல் சீவிய இஞ்சி, தண்ணீர் சேர்த்து, நன்றாக அரைத்து வடிகட்டவும். அதனுடன், தேன் மற்றும் ஊற வைத்த பாதாம் பிசின் சேர்க்கவும். சுவை மிக்க, 'நெல்லி புதினா சர்பத்!' தயார்.
பசியை துாண்டி, செரிமான சக்தியை தரும். உடல் சூடு தணித்து, நோய் எதிர்பாற்றலை அதிகரிக்கும். வாரம் மூன்று முறை பருகலாம்!
- எஸ்.மேரி ரஞ்சிதம், சிவகங்கை.

