PUBLISHED ON : மார் 25, 2011

1. சில மரங்களிலுள்ள இலைகள் இலையுதிர் காலத்தில் நிறம் மாறுகிறது.
சரி: தாவரங்களுக்கு குளோரோபி பிக்மென்ட் தான் பச்சை நிறத்தைக் கொடுக்கிறது. சாந்தோபில் மஞ்சள் நிறத்தையும், கேரோடின் என்பது ஆரஞ்சு நிறத்தையும் மற்றும் அன்தோஸ்யானினை என்பது சிவப்பு நிறத்தையும் கொடுக்கிறது. இந்த பிக்மென்ட்கள் எல்லாம் தாவரத்தில் மறைந்துள்ளன. ஆனால், காலநிலை மாறும்போது குளிரில் க்ளோரோபல் மறைந்து மற்ற நிறமிகள் தெரிகிறது. இதனால் தாவரங்களில் நிறம் மாறுகிறது.
2. விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் 'ஷாம்பு'க்கு தண்ணீர் தேவையில்லை.
சரி: விண்வெளியில் சாதாரண ஷாம்பு பயன்படுத்தினால் சோப்பும் தண்ணீரும் சேரும்போது உடலில் ஒட்டிக் கொள்ளும். அதனால், விண்வெளி வீரர்கள் பயன்படுத்தும் ஷாம்பை தலையில் போட்டு மசாஜ் செய்தால் போதும் நுரைவரும். பிறகு டவலால் துடைத்து எடுத்து விடலாம்.
