sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

அடத்துக்கு விடை!

/

அடத்துக்கு விடை!

அடத்துக்கு விடை!

அடத்துக்கு விடை!


PUBLISHED ON : மே 17, 2025

Google News

PUBLISHED ON : மே 17, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ராயபுரம் நார்த்விக் சி.எஸ்.எம்.பெண்கள் உயர்நிலை பள்ளியில், 1948ல், 7ம் வகுப்பில் படித்தேன். என் தந்தைக்கு ரயில்வே பணியில் இடமாறுதல் வந்ததால் என்னையும், தங்கை அனுசூயாவையும் மாணவியர் விடுதியில் சேர்த்திருந்தார். குடும்பத்தை பிரிந்ததால் துயரடைந்திருந்தேன்.

ஒருமுறை வகுப்பில் ஆசிரியை கண்டித்ததால் உணவை தவிர்த்து அழுது கொண்டிருந்தேன். இரண்டு நாட்களான பின்னும் பிடிவாதத்தை தளர்த்தவில்லை.

இதை அறிந்த ஆசிரியைகள் மாசிலாமணியும், சிஸ்டர் இடிகுலாவும் என்னை அழைத்து இதமாக அருகே அமர வைத்தனர். அடம் பிடிப்பது கெட்டச்செயல் என்பதை தெளிவுபட விளக்கினர். பெண்கள் முன்னேற அடிப்படையாக கடைபிடிக்க வேண்டிய பண்புகளை எடுத்துரைத்தனர். தீய குணங்களை களைந்தால் சாதிக்கலாம் என பொறுமையுடன் புகட்டினர்.

நல்லொழுக்க சிந்தனை எழுந்தது. தொடர்ந்து, பள்ளியில் நடந்த நாடகங்களில் ராஜராஜ சோழன், புத்தர், குமணன் போன்ற வேடங்களில் நடிக்க வாய்ப்பளித்தனர். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவும் ஊக்கமளித்தனர். ஆர்முடன் திறமையை வெளிப்படுத்தி பரிசுகள் பெற்றேன். படிப்பில் கவனம் செலுத்தி நற்பெயர் வாங்கினேன்.

எனக்கு, 92 வயதாகிறது. இல்லத்தரசியாக இருக்கிறேன். குன்றாத உடல், மன ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். எனக்கான பணிகளை நானே நிறைவேற்றிக்கொள்கிறேன். இயன்றவரை பிறருக்கு உதவுகிறேன். இதற்கு அடிதளம் அமைத்த ஆசிரியைகள் மாசிலாமணி, இடிகுலாவின் நினைவை போற்றுகிறேன்.

- வி.சவுந்தரவள்ளி, சென்னை.

தொடர்புக்கு: 99400 32634







      Dinamalar
      Follow us