
கடுக்காய், சித்த மருத்துவத்தில் மருந்துப் பொருட்களில் ஒன்று. மயிலாடுதுறை அருகே, திருக்குறுக்கை வீரட்டம் திருத்தலத்தின் தலமரமாக விளங்குகிறது. இந்த மரத்தின் காயில் உள்ள சிறப்புகளை பார்ப்போம்...
கடுக்காயை வாயில் அடக்கினால் இருமல் குணமாகும். இதன் பொடியை பாலுடன் கலந்து சாப்பிடலாம்.
இது...
* மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது
* எடையை குறைக்க உதவும்
* செரிமானத்தை லகுவாக்கும்
* முடி உதிர்வதை தடுக்கும்
* வாய்ப்புண், வயிற்றுப்புண், இரைப்பை புண்ணை குணமாக்கும்
* மலச்சிக்கலை போக்கும்
* பசியை துாண்டும்
* ரத்தத்தை சுத்திகரிக்கும்
* மூல நோயை தடுக்கும்
* இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்
* கடுக்காயில் உள்ள துவர்ப்புச் சுவை, வாய், தொண்டையில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும்.
தினமும் சிறிதளவு கடுக்காய் பொடி சாப்பிட்டால், உடலுக்கு நன்மை ஏராளம் கிடைக்கும்.
- சவுமியா சுப்ரமணியன்

