PUBLISHED ON : செப் 13, 2013

அ நிறம் | அளவு
கடலில் புயல் வருவதற்கு 10 அல்லது 15 மணி நேரத்திற்கு முன்பே ஜெல்லி மீன்கள் கரை யோரத்தில் இருந்து கடலுக்குள் சென்றடையும். காரணம், புயல் காற்று அவற்றை அடித்துச் சென்று விடும் என்பதால்தான் இந்த வேகம். எப்படி புயல் வருவதை ஜெல்லி மீன்கள் கண்டுபிடிக்கின்றன? இதன் கொம்பு போன்ற அமைப்பு தண்ணீரில் ஏற்படும் அதிர் வலைகளைக் கொண்டு புயல் வருவதைக் கணிக் கின்றன. இந்தக் கொம்பு ஆர்கனைக் கண்டதும் விஞ்ஞானிகளுக்கு ஓர் எண்ணம் உருவானது. இதைப் பார்த்துதான் புயல் எச்சரிக்கைக் கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இது புயல் பற்றிய எச்சரிப்பைக் கொடுப்பதுடன் அதன் வலிமை, எந்த திசையில் இருந்து புயல் வருகிறது என்பனவற்றையும் காட்டுகிறது.
சிறு சிறு பிராணிகளிடமிருந்து கூட மனிதன் எத்தனையோ நுட்பங்களை கற்றுக்கொள்கிறான்.
