PUBLISHED ON : மே 23, 2020

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 100 கிராம்
அவல் - 50 கிராம்
துருவிய தேங்காய் - 50 கிராம்
தர்பூசணி துண்டு - 1 கப்
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
தர்பூசணி தோலின் அடிப்பகுதியில் உள்ள பழுக்காத வெள்ளை சதையை பிரித்தெடுத்து, பொடியாக நறுக்கவும். அரிசியையும், அவலையும் தண்ணீரில் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் வடிகட்டி, தர்பூசணி துண்டு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, மாவாக அரைக்கவும்.
இந்த மாவை, ஐந்து மணி நேரம் புளிக்க விட்டு, தோசைக்கல்லில் ஊற்றவும்; சுவையான, 'தர்பூசணி தோசை' தயார். சட்னி, சாம்பார் தொட்டு சாப்பிடலாம். கோடை வெயிலுக்கு இதமாக இருக்கும்!
- வி.சவுந்தரவள்ளி, மதுரை.
தொடர்புக்கு: 96265 46975
