PUBLISHED ON : அக் 23, 2021

என் வயது, 81; அரசு நுாலகராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன்.
சிறுவர்மலர் இதழை பெரிதும் பாராட்ட வேண்டும். ஒரு கட்டடத்தின் உறுதி தன்மைக்கு, அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமோ, அந்தளவு முக்கியம் நல்ல சமுதாயம் உருவாக தேவையான நற்பண்புகள். அந்த பண்புகளுடன் சிறுவர், சிறுமியர் வளர வேண்டும். அதற்கான மகத்தான பணியை மேற்கொண்டுள்ளது, சிறுவர்மலர் இதழ்.
இது மறுக்க முடியாத உண்மை. காரணம், நீதியை புகட்டும் சிறுகதைகள், பொது அறிவை வளர்க்கும் அரிய தகவல்கள், கட்டுரைகள், சிந்திக்க புதிர்கள், முன்னேற்றத்திற்கான அனுபவங்கள், பிரச்னைகளை தீர்க்க, 'இளஸ்... மனஸ்...' பகுதி மற்றும் ஓவியம் வரைய ஊக்க பரிசுகள் என எல்லா அம்சங்களும் இதில் உள்ளன.
இவ்வாறு நல்ல பகுதிகள் இடம் பெற்றுள்ளதால், சிறந்த சமுதாயம் உருவாக அஸ்திவாரமாக சிறுவர்மலர் இதழ் உதவும். அந்த பணி தொடர வாழ்த்துகிறேன்.
- கே.வேலுச்சாமி, திருப்பூர்.
