PUBLISHED ON : மே 29, 2022

அ நிறம் | அளவு
படத்தில் காணப்படும் இந்த மூதாட்டி போல, 100 வயதை கடந்த பலர், இமய மலை பகுதியில் உள்ள மலாயா என்ற கிராமத்தில் வசிக்கின்றனர். மாசு இல்லாத இயற்கை சூழலில், 100 வயது வரை வாழ முடிவதாக கூறுகின்றனர், இவர்கள்.
எழுத்து வடிவம் இல்லாத, 'கானாஷி' மொழி பேசும் இவர்கள், அலெக்ஸாண்டர் வம்சா வழி வந்தவர்கள் என்று கூறிக் கொள்கின்றனர்.
இவர்கள் தங்கள் கிராமத்தை விட்டு மற்ற இடங்களுக்கு போக மாட்டார்கள்; மற்ற கிராமத்தினர் இங்கு வரவும் பயப்படுகின்றனர். இங்கு, பல மந்திரவாதிகள் இருப்பது தான் பயத்துக்கு காரணம்.
தரமான கஞ்சா செடிகளில் இருந்து தயாரிக்கும் போதை பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதால், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள், இங்கு சுற்றுலா வருகின்றனர்.
— ஜோல்னாபையன்
