sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

/

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!

புலிக் குட்டிகளுக்கு பாலூட்டும் பெண்!


PUBLISHED ON : ஏப் 28, 2013

Google News

PUBLISHED ON : ஏப் 28, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மியான்மர் நாட்டின் தலைநகரான யாங்கோனில், புகழ் பெற்ற வன விலங்கு சரணாலயம் உள்ளது. இங்கிருந்த பெண் புலி ஒன்று, இரு குட்டிகளை ஈன்றது. பின், சில நாட்களில் இறந்து விட்டதால், தாய் இல்லாமல் தவித்து போன இரு குட்டிப் புலிகளுக்கும், உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

வன விலங்கு அதிகாரிகள், புலி குட்டிகளுக்கு, புட்டி மூலம் பால் புகட்டிப் பார்த்தனர்... ஆனால், அவை குடிக்கவில்லை. இதனால், இரண்டு புலி குட்டிகளும் இறக்கும் நிலைக்கு வந்தன. இதையறிந்த, பர்மாவை சேர்ந்த, ஹியா ஹிடாய் என்ற 40 வயது பெண், அந்த குட்டிகளுக்கு பாலூட்ட முன் வந்தார். வன விலங்கு அதிகாரிகளிடம் இதை தெரிவித்ததும், அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தற்போது, இரண்டு குட்டிப் புலிகளையும், தன் பிள்ளைகளைப் போல் பாவித்து,பாலூட்டி வருகிறார் அந்தப் பெண்.

அவர் கூறுகையில்,'புலிக் குட்டிகளுக்கு பாலூட்டுவது, என் மனதுக்கு ஆத்ம திருப்தியை அளிக்கிறது. ஆனாலும், அந்த இரண்டு குட்டிகளுக்கும், பற்கள் முளைக்கும் வரை தான், பாலூட்ட முடியும்...' என்றார்.

ஜோல்னா பையன்.






      Dinamalar
      Follow us