PUBLISHED ON : பிப் 02, 2014

பிரிட்டனைச் சேர்ந்தவர், ரெபேக்கா ஜார்ஜ், 44. கிராபிக் டிசைனராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், தன் தொழிலை பிரபலப்படுத்துவதற்காக, நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தார். அவ்வளவு தான்; அடுத்த ஒரு சில நாட்களில், அவரின் வீட்டில், ஆயிரக்கணக்கான கடிதங்கள் குவிந்து விட்டன. இவை அனைத்தும், அவரின் தொழில் சம்பந்தபட்ட கடிதங்கள் அல்ல. 'கிரெடிட் கார்டு வாங்குகிறீர்களா, எங்கள் வங்கியில் டிபாசிட் செய்கிறீர்களா, கார் லோன் வேண்டுமா...' என்பது போன்ற கடிதங்கள் தான். துவக்கத்தில், இதை, அசவுகரியமாக எடுத்துக் கொண்ட அந்த பெண், இப்போது, அந்த கடிதங்களை சேமித்து, பழைய பேப்பர் கடையில், எடைக்கு போட துவங்கி விட்டார். இதனால், 'கிராபிக்ஸ் டிசைனர் தொழிலை விட, கடிதங்களை எடைக்கு போடும் தொழிலில், அதிக வருமானம் கிடைக்கிறது...' என்று கூறுகிறார்.
— ஜோல்னாபையன்.
