PUBLISHED ON : பிப் 02, 2014

அ நிறம் | அளவு
ஒரு நாய் குண்டாக இருக்கிறது என்றால், அதை வளர்ப்பவரும் குண்டாகவே இருப்பார். அதாவது, குண்டன் தான், குண்டு நாய் வளர்ப்பான். புள்ளி விவரம் எடுத்தால், தொண்ணூறு சதவிகிதம் சரியே. எப்படி இது என்று ஆராய்ந்ததில், ஒரு உண்மையை கண்டுபிடித்தனர். நாயின் சொந்தக்காரன் உடற்பயிற்சியோ, நடை பயிற்சியோ சரி வர செய்யாதவனாகவும், கண்டபடி தின்பவனாகவும் இருந்தால், அவனது நாயும், அப்படியே தான் இருக்கும். எஜமான் எவ்வழி, நாயும் அவ்வழி.
— பாக்கியம் ராமசாமி.
