sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இந்திய ராணுவம் நடத்திய அதிரடி ஆபரேஷன்கள்!

/

இந்திய ராணுவம் நடத்திய அதிரடி ஆபரேஷன்கள்!

இந்திய ராணுவம் நடத்திய அதிரடி ஆபரேஷன்கள்!

இந்திய ராணுவம் நடத்திய அதிரடி ஆபரேஷன்கள்!


PUBLISHED ON : மே 25, 2025

Google News

PUBLISHED ON : மே 25, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாடு விடுதலை அடைந்த காலம் முதல், இந்திய ராணுவம் பல முக்கிய ஆபரேஷன்களை நடத்தியுள்ளது. அவை...

ஆபரேஷன் போலோ (1948) : விடுதலைக்குப் பின், ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைய மறுத்தது. 1948, செப்டம்பர் 13 முதல், 18 வரை நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையால், ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்தது.

ஆபரேஷன் விஜய் (1961) : போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கோவாவை விடுவிக்க, 1961, டிசம்பர் 18, 19ம் தேதிகளில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கோவா, டையூ, டாமன் ஆகியவை இந்தியாவுடன் இணைந்தன.

ஆபரேஷன் கேக்டஸ் லில்லி (1971) : கிழக்கு பாகிஸ்தானை, பாகிஸ்தானிடம் இருந்து விடுவிக்க, 1971, டிசம்பர் 3 முதல் 16 வரை, இந்திய விமானப்படை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் முடிவில் வங்கதேசம், தனி நாடாக உருவானது.

ஆபரேஷன் டிரிடண்ட், பைத்தான் (1971) : வங்கதேச விடுதலைப் போரில் இந்திய கடற்படை, 1971, டிசம்பர் 4, 5 தேதிகளில், இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் வெற்றியைக் கொண்டாட, டிசம்பர் 4ம் தேதியை கடற்படை தினமாக அறிவிக்கப்பட்டது.

ஆபரேஷன் மெக்டூட் (1984) : சியாச்சின் பனிமலைப் பகுதியை கைப்பற்ற, ஏப்ரல் 13, 1984ல், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இந்திய ராணுவம் அப்பகுதியை தக்கவைத்தது.

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் (1984) : பஞ்சாபில் காலிஸ்தான் கோரிக்கையுடன் போராடிய பிந்தரன்வாலே தலைமையிலான குழுவை ஒழிக்க, பொற்கோவிலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் பிந்தரன்வாலே கொல்லப்பட்டார். இதற்கு எதிர்வினையாக, முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்டார்.

ஆபரேஷன் ராஜீவ் (1987) : சியாச்சினில் பாகிஸ்தானிடம் இருந்து, 'கைத் போஸ்ட்' பகுதியை மீட்க, கேப்டன் பனாசிங் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அப்பகுதி, 'பனா போஸ்ட்' எனப் பெயர் மாற்றப்பட்டது.

ஆபரேஷன் பவண் (1987) : இது, இலங்கையில் தமிழ் ஈழம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை மேற்கொண்ட நடவடிக்கை. இந்திய ராணுவத்துக்கு, பெரும் இழப்பை ஏற்படுத்தியது, இது.

ஆபரேஷன் கேக்டஸ் (1988) : மாலத்தீவு அதிபர் கயூமுக்கு எதிரான ஆயுத கிளர்ச்சியை ஒடுக்க, இந்திய முப்படைகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு, அதிபரை காப்பாற்றின.

ஆபரேஷன்கள் விஜய், சேப்டி சாகர், தல்வார் (1999) : இவை, கார்கில் போரில் பாகிஸ்தானுக்கு எதிராக முப்படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகள். இதில் இந்தியா வெற்றி பெற்று, கார்கில் பகுதிகளை மீட்டது.

ஆபரேஷன் பரக்கிராம் (2001) : நாடாளுமன்ற தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய- - பாகிஸ்தான் எல்லையில் பெரும் ராணுவ ஒத்திகை நடத்தப்பட்டது.

ஆபரேஷன் பிளாக் டொர்னேடோ (2008) : மும்பை தாக்குதலுக்கு எதிராக தேசிய கமாண்டோ படை மேற்கொண்ட நடவடிக்கையில், ஒன்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு, பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

ஆபரேஷன் சிந்தூர் (2025) : காஷ்மீர், பஹல்காமில், 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் கொன்றதற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த ஆபரேஷன்கள், இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தேச பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றன.

— மு.ஆதினி






      Dinamalar
      Follow us