sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இந்திய ராணுவம் நடத்திய அதிரடி ஆபரேஷன்கள்!

/

இந்திய ராணுவம் நடத்திய அதிரடி ஆபரேஷன்கள்!

இந்திய ராணுவம் நடத்திய அதிரடி ஆபரேஷன்கள்!

இந்திய ராணுவம் நடத்திய அதிரடி ஆபரேஷன்கள்!


PUBLISHED ON : மே 25, 2025

Google News

PUBLISHED ON : மே 25, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாடு விடுதலை அடைந்த காலம் முதல், இந்திய ராணுவம் பல முக்கிய ஆபரேஷன்களை நடத்தியுள்ளது. அவை...

ஆபரேஷன் போலோ (1948) : விடுதலைக்குப் பின், ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைய மறுத்தது. 1948, செப்டம்பர் 13 முதல், 18 வரை நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையால், ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்தது.

ஆபரேஷன் விஜய் (1961) : போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கோவாவை விடுவிக்க, 1961, டிசம்பர் 18, 19ம் தேதிகளில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கோவா, டையூ, டாமன் ஆகியவை இந்தியாவுடன் இணைந்தன.

ஆபரேஷன் கேக்டஸ் லில்லி (1971) : கிழக்கு பாகிஸ்தானை, பாகிஸ்தானிடம் இருந்து விடுவிக்க, 1971, டிசம்பர் 3 முதல் 16 வரை, இந்திய விமானப்படை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் முடிவில் வங்கதேசம், தனி நாடாக உருவானது.

ஆபரேஷன் டிரிடண்ட், பைத்தான் (1971) : வங்கதேச விடுதலைப் போரில் இந்திய கடற்படை, 1971, டிசம்பர் 4, 5 தேதிகளில், இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் வெற்றியைக் கொண்டாட, டிசம்பர் 4ம் தேதியை கடற்படை தினமாக அறிவிக்கப்பட்டது.

ஆபரேஷன் மெக்டூட் (1984) : சியாச்சின் பனிமலைப் பகுதியை கைப்பற்ற, ஏப்ரல் 13, 1984ல், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இந்திய ராணுவம் அப்பகுதியை தக்கவைத்தது.

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் (1984) : பஞ்சாபில் காலிஸ்தான் கோரிக்கையுடன் போராடிய பிந்தரன்வாலே தலைமையிலான குழுவை ஒழிக்க, பொற்கோவிலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் பிந்தரன்வாலே கொல்லப்பட்டார். இதற்கு எதிர்வினையாக, முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்டார்.

ஆபரேஷன் ராஜீவ் (1987) : சியாச்சினில் பாகிஸ்தானிடம் இருந்து, 'கைத் போஸ்ட்' பகுதியை மீட்க, கேப்டன் பனாசிங் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அப்பகுதி, 'பனா போஸ்ட்' எனப் பெயர் மாற்றப்பட்டது.

ஆபரேஷன் பவண் (1987) : இது, இலங்கையில் தமிழ் ஈழம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை மேற்கொண்ட நடவடிக்கை. இந்திய ராணுவத்துக்கு, பெரும் இழப்பை ஏற்படுத்தியது, இது.

ஆபரேஷன் கேக்டஸ் (1988) : மாலத்தீவு அதிபர் கயூமுக்கு எதிரான ஆயுத கிளர்ச்சியை ஒடுக்க, இந்திய முப்படைகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு, அதிபரை காப்பாற்றின.

ஆபரேஷன்கள் விஜய், சேப்டி சாகர், தல்வார் (1999) : இவை, கார்கில் போரில் பாகிஸ்தானுக்கு எதிராக முப்படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகள். இதில் இந்தியா வெற்றி பெற்று, கார்கில் பகுதிகளை மீட்டது.

ஆபரேஷன் பரக்கிராம் (2001) : நாடாளுமன்ற தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய- - பாகிஸ்தான் எல்லையில் பெரும் ராணுவ ஒத்திகை நடத்தப்பட்டது.

ஆபரேஷன் பிளாக் டொர்னேடோ (2008) : மும்பை தாக்குதலுக்கு எதிராக தேசிய கமாண்டோ படை மேற்கொண்ட நடவடிக்கையில், ஒன்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு, பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

ஆபரேஷன் சிந்தூர் (2025) : காஷ்மீர், பஹல்காமில், 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் கொன்றதற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த ஆபரேஷன்கள், இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தேச பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றன.

— மு.ஆதினி






      Dinamalar
      Follow us