PUBLISHED ON : டிச 27, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமீபத்தில், ஊடகங்களில் காணப்பட்ட, இக்குழந்தையின் புகைப்படம், அனைவரையும் கண் கலங்க வைத்தது. சிரியா நாட்டு அகதியான இக்குழந்தை, கடலில் முழ்கி இறந்து, கடற்கரை மணலில் கவிழ்ந்து கிடந்த காட்சியை, படம் எடுத்தவர், ஒரு பெண் பத்திரிகையாளர்; பெயர், நிலோபர் டெமிர். உலகில், எங்கு பிரச்னை ஏற்பட்டாலும், அங்கு, தன் கேமராவுடன் சென்று, சோக காட்சிகளை படம் பிடிப்பதில், இவருக்கு ஆர்வம் அதிகம். 'நான் பதிவு செய்த இப்படம், உலகப்புகழ் பெறும் என்று நினைக்கவில்லை...' என்றார் நிலோபர்.
— ஜோல்னாபையன்.

