sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : டிச 06, 2020

Google News

PUBLISHED ON : டிச 06, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எம். சுப்ரமணி, வீரணம்பட்டி, கரூர்: ஒரு பத்திரிகையின் வளர்ச்சிக்குத் தேவை, விளம்பரங்களா, வாசகர்களா?

விளம்பரங்கள் தான்; ஆனால், வாசகர்கள் இருந்தால் தானே, விளம்பரதாரர்கள், பத்திரிகையை திரும்பிப் பார்ப்பர்!

லெ.நா. சிவக்குமார், சென்னை: ராமதாஸ், வைகோ, வாசன் - இவர்களுக்கு, தமிழக அரசியலில் பெரிய அளவில் வரவேற்பு இல்லாமல் இருப்பதன் காரணம் என்ன?

தொண்டர்கள் கிடையாது... இதனால், செல்வாக்கு இல்லை! ஏதாவது திராவிட கட்சிகளின் முந்தானையை பிடித்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்!

எம். பானுமதி, கன்னியாகுமரி: பொறியியல் படிப்பின் மதிப்பு இவ்வளவு குறைந்து கொண்டே வரக் காரணம் என்ன?

அந்தப் படிப்பு படித்தவர்களுக்கு, வேலை வாய்ப்பு குறைந்து வருவதே காரணம்! ஏராளமான பொறியியல் கல்லுாரிகளும், மாணவர் சேர்க்கையின்மையால் மூடப்பட்டு வருகின்றன!

* ரா. இளங்கோ, செங்கல்பட்டு: 'டில்லியில், 2013ல் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அது போன்ற மாற்றம் தான், தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலில் நடைபெறும்...' என்கிறாரே கமலஹாசன்; இது சாத்தியமா?

சாத்தியம் தான்! உடல் நிலையை காரணம் காட்டி ஒதுங்க நினைப்பவர்கள், களம் இறங்கினால் சாத்தியமே! ஆனால், தங்கள் கேள்வியில் குறிப்பிட்ட, 'ஸ்டேட்மென்ட்' கொடுத்தவரால் சாதிக்கவே முடியாது!

என். கணேசன், தென்காசி: எனக்கு பல நண்பர்கள் உள்ளனர்; இவர்களில் என்னைக் காக்கும் நண்பன் யார் என நம்புவது?

ஒரு நண்பனும் காப்பாற்ற மாட்டான்! மனதில் உறுதி வேண்டும்; அந்த உறுதி என்ற, உற்ற நண்பனால் மட்டுமே நம்மை காக்க முடியும்!

கே. கணேசன், சென்னை: 'அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது, பிச்சை எடுப்பதற்கு சமம்...' என, உயர்நீதிமன்றம் விமர்சனம் செய்துள்ளதே... இனியாவது திருந்துவரா?

லஞ்சம் வாங்குவது அவர்கள் ரத்தத்தில் கலந்து விட்டது. அதை நிறுத்தினால், அவர்களுக்கு ரத்த புற்றுநோய் வந்து விடும்; கை நீட்டி பழகியவர்கள் ஒருநாளும் மடக்கப் போவதில்லை - சரியான சட்டம் வரும் வரையில்!

ஆர். ஆதிமூலம், மதுரை: எனக்கு அடிக்கடி சோம்பல் ஏற்படுகிறது; இது எதனால்?

தவறான பழக்க வழக்கங்கள் உங்களிடம் இருக்கலாம்! இதனாலேயே உடல் சோம்பல் ஏற்படும். இதற்கு காரணம், அறியாமை. நல்ல நுால்களை படியுங்கள்... ஒழுக்கமாக இருக்கப் பழகுங்கள்; சோம்பல் உங்களை விட்டு ஓடி விடும்!

* பி. ஜெய்குமார், வந்தவாசி: பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத, தி.மு.க., செலவுகளை எப்படி சமாளிக்கிறது?

கை நீட்டி சேர்த்து வைத்த பணம் இருக்கிறதே! இன்னும், 10 பொது தேர்தல் வந்தாலும், செலவுகளை எதிர்கொள்ளும்!






      Dinamalar
      Follow us