
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உ.பா., பிரியர்களை கட்டுப்படுத்தவே முடியாது... நேரம் குறைத்தாலும், அவர்கள் முன்னதாகவே வாங்கி வைத்துக் கொள்வர்!
அவரது கட்சிக்காரர்கள், ஆன்மிகத்துக்கு எதிராக தினமும் பேசி வருகின்றனரே... இது, ஆன்மிகவாதிகளின் எதிர்ப்புக்கு உள்ளாகி வருகிறது. இதனால், 'துாக்கமும் வரமாட்டேன் என்கிறது...' என்று புலம்பியுள்ளாரே... அதனால் தான் இந்த கூற்று!
இனி, பேசி பயன் இல்லை என்பதை புரிந்து கொண்டு, போர் தான் நிரந்தர தீர்வை கொண்டு வரும் என, முடிவு செய்து விட்டார் போலும்!
ஆமாம்... அவர், ஹிந்து இல்லை... அதனால் தான், பல நுாறு ஆண்டுகளுக்கு முன், அவர் ஆண்ட தஞ்சாவூரில், விஞ்ஞானப்பூர்வமான, சிவன் கோவிலை கட்டி விட்டார்! வெற்றி மாறன் போன்றோரின் அறிக்கைகளை படித்து, நேரத்தை வீணடிக்காதீர்கள்!
தமிழக, காங்., முன்னாள் முதல்வர் காமராஜருக்கு, ஆங்கிலம் வராதே... இருந்தும், அகில இந்திய அளவில், காங்கிரசில் மாற்றங்களை கொண்டு வந்தாரே... எனவே, நீங்கள் நினைப்பது, தடையல்ல!

