PUBLISHED ON : மார் 17, 2013

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மலேசியாவைச் சேர்ந்த யூலியா என்ற பெண், அங்குள்ள மருத்துவ சோதனைக் கூடத்தில் வேலை பார்த்து வந்தார். சோதனைகளின்போது, அடிக்கடி, தன் கைகளை கழுவும் பழக்கம், இவருக்கு ஏற்பட்டது. இந்த பழக்கம், படிப்படியாக அதிகரித்து, ஒரு நாளைக்கு, குறைந்தது, 300 தடவையாவது, கைகளை கழுவும் அளவுக்கு, அவர் அடிமையாகி விட்டார். இதனால், அவரது உள்ளங்கைகள் அரித்துப் போய் விட்டன. ஆனாலும், இந்த வினோத பழக்கத்தை, அவரால் கைவிட முடியவில்லை. இதையடுத்து, அவர், வேலையை விட்டும் நீக்கப்பட்டு விட்டார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், யூலியா, ஒருவித மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
— ஜோல்னா பையன்.

