PUBLISHED ON : ஜூலை 31, 2016

அ நிறம் | அளவு
இந்தியாவில், 80 சதவீதம் காடுகள் இருந்த நிலையில், இன்று, அவற்றை எல்லாம் அழித்து, வீட்டு மனைகளாக்கி விட்டோம். ஆனால், பூனாவில் பிறந்த, 75 வயதான அனில், அமெரிக்காவில் பிறந்த, 64 வயதான பாமில தம்பதி, காடு மீது இருந்த பிரியத்தின் காரணமாக, தங்கள் சொத்துகளை விற்று, குடகில், 300 ஏக்கர் நிலம் வாங்கினர். இதில், பல்வேறு தாவரங்கள், மரங்கள் மற்றும் விலங்குகளை வளர்த்து வருகின்றனர். அது, இன்று அடர்ந்த காடாகி விட்டது. குழந்தைகள் இல்லாத இத்தம்பதியினர், விலங்குகளையே குழந்தைகளாக வளர்த்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் இவர்களுடைய முயற்சியை ஏளனம் செய்தவர்கள், இன்று வியப்புடன் பாராட்டுகின்றனர்.
— ஜோல்னாபையன்
