PUBLISHED ON : நவ 26, 2017

அ நிறம் | அளவு
கடந்த, 1925ல் மஹாராஷ்டிரா மாநிலம், கராட் என்ற இடத்தில் பிறந்தவர், கே.டி. யாதவ்; சிறந்த மல்யுத்த வீரரான இவர், 1952ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், குஸ்தி பிரிவில் கலந்து கொள்வதற்காக, கூட்டுறவு வங்கியில் இருந்து, மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கினார். பின், போட்டியில், மூன்றாவது இடத்தைப் பெற்று, வெங்கலப் பதக்கத்துடன், இந்தியா திரும்பினார்.
இன்று போல், அன்று விளம்பரங்களோ, செய்திகளோ இல்லாததால், இவர் மறக்கப்பட்டார். தற்போது, இவருடைய வாழ்க்கையை வெளியுலகிற்கு காட்டும் நோக்கத்துடன், இந்தி சினிமா ஒன்று தயாராகி வருகிறது. சியாம் பெனகல் இயக்கும் இப்படத்தில், யாதவ் ஆக நடிக்கிறார், நடிகர், சன்க்ராம் சிங்.
—ஜோல்னாபையன்.
