
சுதந்திரத்திற்கு முன், இந்தியாவில், 530க்கும் அதிகமான சமஸ்தானங்களும், அவற்றிற்கு, ராஜா - ராணிகளும் இருந்தனர்.சுதந்திரத்திற்கு பின், அவை அனைத்தும், இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.
முன்னாள் ராஜா - ராணிகள், அரசியல், லாட்ஜ், ஓட்டல் போன்ற துறைகளில் கோலோச்சி, சிலர், ஒதுங்கி விட்டனர். ஆனால், மைசூர் ராஜா மட்டும் இன்றும் முழு மரியாதையுடன் ராஜாவாகவே பவனி வருகிறார்.
இன்றும் மைசூரில், நவராத்திரி தசரா விழா அமர்க்களப்படுகிறது. முதல் மரியாதை, ராஜாவுக்கு தான். ஊர்வலமே அவர் அரண்மனையிலிருந்து தான் புறப்படும்.
இன்றைய ராஜா, கிருஷ்ண தத்த சாமராஜ உடையார். மே 28, 2015ல் பதவியேற்றார்.
இவர், கல்லுாரியில் தன்னுடன் படித்த பெண்ணை காதலித்தார். ராணிக்கு தெரிய வந்ததும், அந்த திரிஷிகா குமாரியையே திருமணம் செய்து வைத்து விட்டார். ராஜஸ்தான் மாநிலம், ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் தான், திரிஷிகா.
எந்த அரசியல் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொள்ளாததால், அனைத்து கட்சியினராலும் கவுரவமாக நடத்தப்படுகிறார், ராஜா. இந்த ஆண்டு, இவர்களுடைய, ராஜா - ராணி பொம்மை ஜோடி, அமர்க்களமாக விற்பனையாகியுள்ளது.

