PUBLISHED ON : நவ 12, 2023

* இரவை பகலாக்கும் இத்திருநாள்
நம் அகம் இருள் நீக்கி
சுகம் பல கொடுக்கும்
தீப ஒளித் திருநாள்!
* காவிரி போன்ற புனித நதிகள்
மாசு படுவதைத் தடுக்க
இந்நாளில் உறுதிமொழி எடுத்து
அதிகாலை எழுந்து
கங்கா ஸ்நானம் செய்திடுவோம்!
* கைபேசி சிறையிலிருந்து
ஒருநாள் விடுதலை வாங்கி
சங்கு சக்கரம் சுழல்வது போல்
நண்பர்கள், உற்றார்களுடன் வலம் வந்து
பேசிக் குலாவி மகிழ்ந்திடுவோம்!
* ஆதரவற்றோர், அனாதை குழந்தைகளைநாடிச்சென்று
புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி
வண்ண வண்ண புஸ்வானமாய்
உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சி
பூப்பூவாய் பூத்துக் குலுங்கட்டும்!
* வெற்றிகள் வலம் வந்து
சாதனைகள் பல படைக்க
மேல் எழும்பும் ராக்கெட்டாய்
நமது இலக்குகளும் மேலே மேலே
உயர்ந்து செல்லட்டும்!
* நரகாசுரன் வதம் செய்யப்பட்ட இந்நாளில்
மனதில் அவ்வப்போது தோன்றும்
பொறாமை, சூழ்ச்சி, வஞ்சனை
வக்கிர எண்ணங்களை
வதம் செய்ய உறுதி எடுப்போம்!
* மனதின் எதிர்மறை எண்ணங்கள்
சரவெடி போல் வெடித்துச் சிதற
நேர்மறை எண்ணங்கள்
தீபங்களின் வரிசை போல்
அணிவகுத்து வரச் செய்வோம்!
* பண்பாடு பழக்க வழக்கம் மாறாமல்
பாரம்பரியப் பெருமை சிதையாமல்
பட்டொளி வீசும் இத்திருநாளை
பகட்டின்றி நோக்கிடுவோம்
பரவசமாய் கொண்டாடிடுவோம்!
பூவைசுபாவாணன், கோவை.
