PUBLISHED ON : ஏப் 03, 2022

அ நிறம் | அளவு
ஒரு காலத்தில் போலீஸ் படை எட்டிப் பார்க்கக் கூட பயந்த குகை, இன்று சுற்றுலா மையமாகி இருக்கிறது.
உத்தராஞ்சல் மாநிலத்தில், டேராடூனிலிருந்து, 15 கி.மீ., துாரத்தில், நுாற்றுக்கணக்கான ஏக்கரில் உள்ளது மலை பகுதி. இது, வெள்ளையர் காலத்தில் மிக கொடிய கொள்ளையர்களின் புகலிடமாக இருந்தது. அப்போது, இந்த ஊர் பக்கம் தலை காட்டவே பயப்பட்டனர், போலீசார்.
ஆனால், இன்று, 35 ரூபாய் கட்டணம் செலுத்தி, குகையை காண வருகின்றனர், சுற்றுலா பயணியர். குகைக்குள், 600 மீட்டருக்கு மேல், ஐஸ் போன்ற அருவி தண்ணீரில் நடந்து போக வேண்டும். ஷூ அணிந்திருந்தால் அதிக கட்டணம் செலுத்தி தான், அருவியில் நடக்க வேண்டும்.
சமீபகாலமாக புதிய கொள்ளையர்கள் யாரும் இங்கு உருவாகவில்லை.
அரசியலில் வாய்ப்பு இருக்கும்போது, எதுக்காக கொள்ளையனாக தொழில் செய்ய வேண்டும்?
— ஜோல்னாபையன்
